நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வருகின்ற 20ம் தேதி காய்கறிகள் சாகுபடி பயிற்சி நடைபெறுகிறது.
இது குறித்து வேளாண் அறிவியல் நிலையத் தலைவர் அகிலா வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டள்ளதாவது : இயற்கை முறையில் காய்கறிகள் சாகுபடி, ஒரு நாள் இலவசப் பயிற்சி வருகின்ற 20ம் தேதி காலை 9 மணிக்கு நடைபெற உள்ளது.
இதில், இயற்கை முறையில் காய்கறி சாகுபடி செய்வதன் முக்கியத்துவம், காய்கறிகளை சாகுபடி செய்யும் முறைகள், உயிர் உரங்களின் பயன்பாடு மற்றும் நன்மைகள், இயற்கை வழியில் பூச்சி மற்றும் நோய் மேலாண்மை உயிரியியல் பூஞ்சான், பாக்டீரியா கொல்லிகளின் பயன்பாடு மற்றும் தாவர வளர்ச்சி ஊக்கிகள், பூச்சி விரட்டி கரைசல்கள் தயாரித்தல், அங்கக சான்றிதழ் பெறும் வழிமுறைகள் குறித்து விரிவாக செயல் விளக்கத்துடன் எடுத்துரைக்கப்படுகின்றன.
விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் செயல்பட்டு வரும் வேளாண்மை அறிவியல் நிலையத்துக்கு நேரிலோ அல்லது தொலைபேசி மூலமாகவோ, தங்களது பெயரை 19ம் தேதி காலை 9.30 மணிக்குள் கண்டிப்பாக முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04286-266345, 266650 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.